×

இந்திய விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் இந்த நாள் முக்கியமானது: ஜிதேந்திர சிங்

ஸ்ரீஹரிகோட்டா: சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டதன் மூலம் இந்தியா பெருமை கொள்ள வேண்டிய தருணம் இது என ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். தற்சார்பு இந்தியா திட்டத்தில் சந்திரயான் 3 உருவாக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் இந்த நாள் முக்கியமானது. இந்தியாவை பெருமை அடைய செய்ததற்கு இஸ்ரோவுக்கு நன்றி; இந்த தருணத்தில் பிரதமர் மோடிக்கும் நன்றி எனவும் கூறினார்.

The post இந்திய விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் இந்த நாள் முக்கியமானது: ஜிதேந்திர சிங் appeared first on Dinakaran.

Tags : Jitendra Singh ,Sriharikota ,India ,
× RELATED மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு...